12th tamil unit 2-2

பிறகொரு நாள் கோடை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

அ) சூரிய ஒளிக்கதிர்

ஆ) மழை மேகங்கள்

இ) மழைத்துளிகள்

ஈ) நீர்நிலைகள்

Answer:

இ) மழைத்துளிகள்

குறுவினா

Question 1.

‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.

Answer:

  • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
  • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
  • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

சிறுவினா

Question 1.

‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து

உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்” – இக்கவிதையின் அடி,

‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.

Answer:

‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்’

  • ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
  • விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒருதுளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான்.
  • அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான். இஃது ஓர் நீர்வட்டம்.

“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குறித்து

உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்”

  • நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான்.
  • வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கின்றான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.

நயம் :

  • நாட்டுப்புறப்பாடலில் ஒரு துளி பனி நீரைக்கூட சூரியன் விடுவதில்லை தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடப்படுகிறது.
  • பிறகொரு நாள் கோடை’ கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பும் நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார்.
  • பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் – நாட்டுப்புறப்பாடல்.
  • நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் – பிறகு ஒரு நாள் கோடை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

பகலும் இரவும் சந்திப்பது

அ) இரவு

ஆ) அந்தி

இ) வைகறை

ஈ) யாமம்

Answer:

ஆ) அந்தி

Question 2.

நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது?

அ) கரங்களால் பருகி

ஆ) நீரில் மூழ்கி

இ) உதடுகள் குவித்து

ஈ) குவளையில் பிடித்து

Answer:

இ) உதடுகள் குவித்து


Question 3.

அய்யப்ப மாதவன் இயங்கி வரும் துறைகள்

அ) இதழியல் துறை, திரைத்துறை

ஆ) கல்வித்துறை, இதழியல் துறை

இ) இசைத்துறை, இதழியல் துறை

ஈ) ஒளித்துறை, திரைத்துறை

Answer:

அ) இதழியல் துறை, திரைத்துறை


Question 4.

நம் பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ள தொகுப்பு

அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்

ஆ) நீர்வெளி

இ) பிறகொரு நாள் கோடை

ஈ) மழைக்குப் பிறகும் மழை

Answer:

அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்

Question 5.

கூற்று சரியா? தவறா?

கூற்று 1 : நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது.

கூற்று 2 : செங்குத்தாய் இறங்கிய மழையைக் கரத்தினுள் வழிய விடுகிறேன்.

அ) கூற்று 1 சரி 2 தவறு

ஆ) கூற்று இரண்டும் தவறு

இ) கூற்று 1 தவறு 2 சரி

ஈ) கூற்று இரண்டும் தவறு

Answer:

அ) கூற்று 1 சரி 2 தவறு


Question 6.

கூற்று சரியா? தவறா?

கூற்று 1 : மீதமான சொட்டுகளை ஈரமான மரங்கள் தலையசைத்து உதறுகிறது.

கூற்று 2 : வெயில் கண்ட பறவைகள் வெயில் தாங்காமல் வீழ்கின்றன.

அ) கூற்று இரண்டும் தவறு

ஆ) கூற்று இரண்டும் சரி

இ) கூற்று 1 சரி 2 தவறு

ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Answer:

இ) கூற்று 1 சரி 2 தவறு

Question 7.

கூற்று சரியா? தவறா?

கூற்று 1 : கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்குள் மத்தளம் அடிக்கின்றது.

கூற்று 2 : போன மழை மீண்டும் திரும்பாது என அலைகிறேன்.

அ) கூற்று இரண்டும் சரி

ஆ) கூற்று 1 தவறு 2 சரி

இ) கூற்று 1 சரி 2 தவறு

ஈ) கூற்று இரண்டும் தவறு

Answer:

ஈ) கூற்று இரண்டும் தவறு


Question 8.

சரியானதைத் தேர்க.

அ) நகரம் – அமைதியாயிருந்தது

ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

இ) மரங்கள் – வேர்விட்டன

ஈ) பறவைகள் சங்கீதம் இசைக்கவில்லை

Answer:

ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

Question 9.

பொருந்தாததைத் தேர்க.

அ) மரங்கள் – தலையசைத்து உதறுகிறது

ஆ) பறவைகள் – சங்கீதம் இசைத்தன

இ) சுவர் – நீர்ச்சுவடுகள் அழித்தன

ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன

Answer:

ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன


Question 10.

பொருத்துக.

அ) இன்று – 1. அய்யப்ப மாதவன்

ஆ) நீர்வெளி – 2. கவிதைக்குறும்படம்

இ) சிவகங்கை – 3. கவிதை நூல்

ஈ) நரம்புகள் – 4. வீணை

அ) 2, 1, 4, 3

ஆ) 2, 3, 4, 1

இ) 2, 3, 1, 4

ஈ) 3, 1, 2, 4

Answer:

இ) 2, 3, 1, 4

Question 11.

பொருத்துக.

அ) நகரம் – 1. நரம்புக்குள் மீட்டுதல்

ஆ) பறவைகள் – 2. உதடுகள்

இ) வீணை – 3. வைரம்

ஈ) ஒளிக்கதிர்கள் – 4. சங்கீதம்

அ) 3, 1, 4, 2

ஆ) 3, 2, 1, 4

இ) 3, 2, 4, 1

ஈ) 3, 4, 1, 2

Answer:

ஈ) 3, 4, 1, 2


Question 12.

‘பிறகொருநாள் கோடை’ என்னும் கவிதை எடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு

அ) மழைக்குப் பிறகும் மழை

ஆ) நானென்பது வேறொருவன்

இ) நீர்வெளி

ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்

Answer:

ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்

Question 13.

அய்யப்ப மாதவனின் ‘இன்று’ என்பது

அ) கவிதைத் தொகுப்பு

ஆ) கவிதைக் குறும்படம்

இ) ஆவணப்படம்

ஈ) புதினம்

Answer:

ஆ) கவிதைக் குறும்படம்


Question 14.

அய்யப்பன் மாதவனின் மாவட்டம் ………….. ஊர் ………………..

அ) தஞ்சாவூர், பருத்திக்கோட்டை

ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை

இ) மதுரை, அவணியாபுரம்

ஈ) திருநெல்வேலி, வள்ளியூர்

Answer:

ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை


Question 15.

அய்யப்ப மாதவனுக்குத் தொடர்பில்லாத கவிதைத் தொகுப்பினைக் கண்டறிக.

அ) மழைக்குப் பிறகும் மழை

ஆ) நானென்பது வேறெருவன்

இ) நீர்வெளி

ஈ) நீர்விழிராகம்

Answer:

ஈ) நீர்விழிராகம்


Question 16.

போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அழைகிறேன் என்று பாடியவர்

அ) அய்யப்ப மாதவன்

ஆ) இரா. மீனாட்சி

இ) வேணுகோபாலன்

ஈ) ஆத்மாநாம்

Answer:

அ) அய்யப்ப மாதவன்

குறுவினா

Question 1.

அய்யப்ப மாதவன் வெளியிட்டுள்ள கவிதை நூல்கள் யாவை?

Answer:

  • மழைக்குப் பிறகும் மழை
  • நானென்பது வேறொருவன்
  • நீர்வெளி

Question 2.

வெளில் கண்ட பறவைகளின் செயல் யாது?

Answer:

  • வெளிலைக் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைக்கின்றன.

Question 3.

சூரியனைக் கண்ட மரங்களின் செயல் யாது?

Answer:

  • சூரியனைக் கண்ட ஈரமான மரங்கள் மீதமுள்ள சொட்டுக்களை தலையசைத்து உதறுகின்றன.


சிறுவினா

Question 1.

மழையிலிருந்து விடுபடும் ஊரின் தன்மையைக் கவிஞர் அய்யப்ப மாதவன் எக்குறியீடுகளின் மூலம் வெளிப்படுத்துகின்றார்?

Answer:

  • மழை நின்றதால் சுவர்கள் மீது வழிந்தோடிய மழைநீர் நின்றது.
  • கொஞ்சம் இருந்த நீர் சுவடுகளையும் சுவர் வேகமாகத் தன் வசம்படுத்திக் கொண்டது.
  • ஈரமான மரங்கள் தங்கள் கிளைகளை அசைத்து தன் மீது படர்ந்திருந்த மீதமான நீர்த்துளிகளையும் உதறியது.
  • வெயிலைக் கண்டதால், மழை நீருக்கு அஞ்சியிருந்த பறவை உற்சாகம் வெளிப்பட தன் குரலால் சங்கீதம் இசைத்தது.
  • இவையே அவ்வூர் மழையிலிருந்து விடுபடுவதைக் குறிப்பிடும் குறியீடுகளாக அய்யப்ப மாதவன் குறிப்பிடுகிறார்.

Question 2.

கவிஞர் அய்யப்ப மாதவன் பற்றிக் குறிப்பு எழுதுக.

Answer:

  • பெயர் : அய்யப்ப மாதவன்
  • ஊர் : சிவகங்கை – நாட்டரசன் கோட்டை
  • பணி : திரைத்துறை, இதழியல் துறை
  • நூல்கள் : மழைக்கு பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர் வெளி. இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும் வெளியிட்டுள்ளார்.